dvdfv

Thursday, February 20, 2014

அறிவியல் தொழில் நுட்பம் மீள்பார்வை

அறிவியல் கருத்தாக்கங்களின் போக்கு: "அறிவாண்மை" என்பது ஒரு குறிப்பிட்ட ஆதிக்கத்தின் "கருவூலம்" என்ற நிலை மாறி வளர்ந்த அறிவியல் ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டில் அரசியல் ஆதிக்கம் செய்த வணிக முதலாளிகளால் ஒரு பெரும் திருப்பத்தைச் சந்தித்தது. உற்பத்தியின் அடிப்படைக் குறிக்கோள் சமூகத்தேவை என்பது மாறி "இலாபநேக்கமே" அடிப்படையாகவும் தீர்மானிக்கும் கூறாகவும் மாறியது. நவீன அறிவியலின் உயர் தொழில்நுட்பமும் வணிகர்களின் கருவிகளாக மாற்றப்பட்டன. இத்தகு தொழில்நுட்பமே மக்களை அடிமைப்படுத்தவும் இயற்கைச் செல்வங்களைக் கொள்ளையடிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இம் முதலாளிகளின் ஆதிக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. வேளாண்துறைகள், தொழில்துறைகள் பின்தள்ளப்பட்டு, இந்தியா முன்னேற வேண்டுமானால் நவீன அறிவியலும், தொழில்நுட்பமும் இன்றியமையாதன என நம் மக்களும் நம்பும் வகையில் அறிவியல் உலகம் தழுவியதாக்கப்பட்டது. ஆக சமூகப் பொருளாதார அரசியல் நோக்கங்களே "அறிவியல்" நோக்கமாக மாற்றப்பட்டிருப்பதை இதன்கண் உணரலாம். டார்வின் கொள்கையையும் இன்றைய தொழில்நுட்பச் சமூகத்தின் கணிதமயமாக்கலையும், இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக கூற இயலும். உலகை கணிதமயமாக்குகிற முதன்மைப்படுத்துகிற விதியாகத் தெகார்த்தேலின் "கார்ட்டிசீய பார்வை" செயல்படுகிறது. இவ்விதியைத் திறம்படச் செய்யக்கூடிய கருவியாக "கணிப்பொறி" இயங்குகிறது என்றே கூறலாம். கார்ட்டீசிய வரைகணிதக் கொள்கை: 1. சந்தேகத்தைத் தவிர்க்க மனதிற்கு எது தெளிவாகத் தெரிகிறதோ அதை மட்டும் ஏற்றுக் கொள்வது. 2. பெரிய சிக்கலைச் சிறிதாகப் பிரித்துப் பார்த்தல் 3. எளியவற்றிலிருந்து தொடங்கிச் சிக்கலைக் குறித்து விவாதித்தல் / வாதிடுதல் 4. ஒன்றைச் செய்தவுடன் அதனைச் சோதித்து சரிபார்த்தல் / தொழில்நுட்பச் சமூகத்தின் இக்கொள்கை பற்றி ஆராயும்முன் "தொழில்நுட்பம்" குறித்தத் தெளிவான சிந்தனை நமக்கு இருப்பது மிக அவசியம். தொழில் நுட்பம் - தொழில்நுட்பப் பார்வை: "தொழில்நுட்பம்" என்பது அறிவியலின் பயன்பாடு என்ற கருத்தாக்கமே 19 ஆம் நூற்றாண்டு வரை நிலவிய கருத்து என்றாலும் தொழில்நுட்பம் வேறு. "தொழில்நுட்பப் பார்வை" வேறு. தொழில்நுட்பம் இயந்திரங்களைச் சார்ந்ததாகப் பயன்பாடு கருதிய ஒன்று. ஆனால் தொழில்நுட்பப் பார்வை என்பது விதிமுறை என்றே சொல்ல வேண்டும். இதைப் பற்றி அறிஞர் ஜாக்வஸ் எலுவீ (Jacques Ellue) கருத்துரைக்கையில் தொழில்நுட்பப் பார்வையை மானுட இனத்தின் ஒரு மனநிலை மனோபாவமாக எடுத்துரைக்கின்றார். தொழில்நுட்பப் பார்வை என்பது புழக்கத்தில் இருப்பது பற்றியது இல்லை. இயந்திரங்களை, கருவிகளைப் பயன்படுத்துவது அல்ல. இயந்திரங்களை இயங்குவதற்காக ஓர் அமைப்பாக வடிவம் கொடுக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்டு நியாயப்படுத்துவது என்ற குணமுடைய ஒன்று. சுருங்கக்கூறின் தொழில்நுட்பப் பார்வை என்பது திட்டமிட்ட இலக்கை அடையக்கூடிய பலமுறைகளின் முழுமை. ஆக தொழில்நுட்பப் பார்வை பற்றிய பிரச்சினை என்பது மனிதன் பற்றிய பிரச்சனையாகும். தொழில்நுட்பப் பார்வைதான் இயந்திரங்களை இணைப்பதிலும், உருவாக்குவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இயந்திரங்களைச் சமூகத்துடன் சேர்க்கிறது, நெறிப்படுத்துகிறது. ஒரு காலக்கட்டம் வரை தொழில்நுட்பத்திற்குப்பின் அறிவியல் வளர்ந்தது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அறிவியலுக்காகக் காத்திருந்தது. ஆனால் இன்று தொழில்நுட்பப் பார்வை / தொழில்நுட்பத்தின் கையில் ஓர் கருவியாக அறிவியல் உள்ளது. இன்றையச் சூழலில் மானிட நிலைக்குத் தொழில்நுட்பத் தாக்கம் குறித்த கேள்வியே முதன்மை பெறுவதால் அறிவியலுக்கும் தொழில்நுட்பத்திற்கான தத்துவம் பற்றிய கருத்து தேவையற்றது. மேற்கூறிய விளக்கங்களால் இன்றைய "தொழில்நுட்பம்" அறிவியலின் பயன்பாடு என்பது தவறு என்ற கருத்திணை உணர முடிகிறது. பெரும்பான்மையான அமைப்புகளிலும் நிறுவனங்களிலும் இத்தொழில்நுட்பப் பார்வையே செறிவாகச் செயல்படுகிறது. தொழில்நுட்பம் - தொழில்நுட்பப் பார்வை - வேறுபாடுகள்: 1. முற்காலச் சமூகங்கள் கருவிகளின் பயன் கருவிகளை அபிவிருத்தி செய்தல் குறித்து கவனம் செலுத்தியது. இது கருவிகள் அதனளவில் கருவிகள் என்பதற்காக அல்ல. 2. கருவிகள் சிலவாகவும் கருவிகளைக் கையாள்பவர் திறன் அக்கருவிகளின் குறைகளை ஈடுசெய்யும் வகையில் இருந்தன. ஆகத் தொழில்நுட்பம் மனித வாழ்க்கைக் கலாச்சார அமைப்பு முறையில் பொதிந்த ஒரு கூறு. இன்றைய நிலை வேறு. கருவி கையாள்பவன் திறனை விட மிக்கதாய் அவனைக் கட்டுப்படுத்துவதாய் உள்ளது. 3. மனிதனுக்கான தொழில்நுட்பக் கருவிகள் மாறுதல் அடைந்த நிலைமாறி தொழில்நுட்பக் கருவிகளுக்காக மனிதனும் அமைப்புகளும் தங்களை மாற்றிக் கொள்ளும் நிலை உள்ளது. 4. மதிப்பீடுகள் அறநெறிகள் ஆகிய எந்தக் கட்டுப்பாடுமின்றி தொழில்நுட்பப்பார்வை, தொழில்நுட்பம் அதன் செயல்திறன் குறித்த கண்க்கீட்டையே கட்டுப்பாடாகக் கொண்டு வேகமாக முன்னேறுகிறது. மேற்குறித்த வேறுபாடுகள் "தொழில்நுட்பம்" பற்றிய பிரச்சனை என்பது மனிதன் குறித்த பிரச்சனை என்பதை உறுதி செய்கின்றன. தொழில்நுட்பத்தின் செயல்பாடு: ஆதிக்கச் சக்திகளின் வெளிப்பாடாக இன்றைய தொழில்நுட்பம் உள்ளது. உயிர் அமைப்பு பற்றிய "டார்வின் கொள்கை" உரைத்தது என்ன? உயிரின் வாழ்க்கைப் போராட்டத்தில் வலிமை உள்ளதே வாழும். அவ்வாறு வலிமையில் வெற்றி பெற்ற உயிர் தான் வாழ இடம் போதவில்லை எனில் தம்மினத்துடன் புது இடத்தில் வாழலாம். அங்குள்ள புதிய கூறுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இக்கோட்பாட்டில் ஊடுருவி நிற்கும் கருத்தாக்கம் என்று உள்ளது. அது வன்முறையின் ஊடாக முன்னேற்றம் என்பதே. ஓர் உயிரானது வலிமை பெற்று விளங்க வேண்டுமெனில் பிற உயிர்களைத் தன் வலிமையால் வெல்ல வேண்டும். இந்தப் போட்டி, வன்முறை தவிர்க்க முடியாதவை. வலிமையால் வென்று தம் கூறுகளை நம் வம்சத்திடம் ஒப்படைத்துக் கண்மூடும் போது அந்த இனம் நிச்சயமாக "வளர்ந்த இனம்" என்கிறது இக்கொள்கை. தனிஉடமை - அதைக்காக்கும் வாரிசு ஆதிக்கச் சக்திகளின் சித்தாந்தம். இச்சித்தாந்தத்தில் தொழில்நுட்பம் புகுந்ததன் விளைவு மரபணுக்கள் விதிப்படி அமையாது. சூழலுக்கு ஏற்ப எதிர்வினை புரிந்து தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தன்மையுடையனவாய் அமைகிறது. அதன்பின் தொடர்ந்து ஒருங்கிணைப்பதன் மூலமே முழுமை பெறும் என்பது இன்றைய தொழில்நுட்பக் கணிப்பொறியுகத்தின் விளைவாகும். அதாவது எல்லாமே தகவல்தான். மனித உடலின் விரிவாகப் பார்க்கப்பட்ட இயற்கை மனித மனதின் விரிவாக இயற்கையை இன்று பார்க்கிற நிலை எற்பட்டுள்ளது. எல்லாமே தகவல் என்றால் உயிர் அமைப்பும் தகவல்தான். இவை குறிப்பிட்ட கால அளவில் தகவல்களைச் சேகரிக்கிறது. பரிசீலித்து ஒழுங்கமைக்கின்றன; வெளிப்படுத்துகின்றன. பரிணாமம் என்பது சில தகவல்களை மலர்த்துவதும் பிற தகவலை ஈர்ப்பதுமாக ஒரு நிகழ்முறை மட்டுமே. உயிர் அமைப்பும், கணிப்பொறியும் ஒன்று என்ற கருத்து இன்று இணைக்கப்பட்டு உயிர்க்கணிப்பொறி உயிருள்ள கணிப்பொறி உருவாக்கப்படுகிறது. இரண்டுக்கும் ஒரு மொழி வந்துவிட்டது இரண்டும் ஒன்றை ஒன்று வளர்த்துச் செல்கின்றன. ஆக இரண்டுக்கும் இடையே வேறுபாடு இல்லை. உயிரற்ற பொருளும் மனிதனும் ஒன்று. எதையும் எதாகவும் மாற்றலாம். அறிவியல் தொழில்நுட்பத்தால் உயிர்க்குல மாற்றங்கள்: அறிவியல் தொழில்நுட்பம் புதுப்புதுப் பயன்பாடுகளைத் தந்து "பெரும் வெற்றி" தந்துள்ளது எனினும் அதன் விளைவுகளைப் பட்டியலிடுகையில் பாதகமானதாகவே அமைந்துள்ளது. 1. "பசுமைப்புரட்சி" என்ற பெயரில் பூர்வீகப் பயிரினங்கள் இருக்க வீரிய இனங்களாகத் திணித்து உரக்கம்பெனிகள் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளுக்குப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டு இருப்பது - விளைவு மரபுவழி வித்துக்களை இழந்தது. (எ.கா. உங்கள் திட்டம், பெப்சிகோல நிறுவனம்) 2. சமூக நலக்காடுகளைப் "பராமரிப்பு" என்ற பெயரில் தேக்குக்கன்றுகன், யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளை வளர்த்தல் - விளைவு நிலத்தடிநீர் குறைந்து நிலச்சரிவுகள். காடுகளை அழித்ததால் மழைவளம் குறைந்தது - விளைவு ஆதிவாசிகளை அகதிகளாக்கியது. 3. அணைத்திட்டம் - நீர்தேக்கி வைத்தல் - பல நோய்களின் தோற்றத்திற்கும் நிலங்களில் உவர்தன்மை மிகுந்து வேளாண்மை பாதிக்கப்பட்டது. விளைவு - விவசாயிகள் வயிற்றுபிழைப்பிற்காக இடம் பெயர வைத்தது. 4. எல்லைக்கடந்து பயன்படுத்திய புகைவடிவ எரிபொருட்கள் - ஓசோன் படலத்தில் துளை ஏற்படச் செய்தது - விளைவு பூமியின்மீது வெப்பம் அதிகமாகி அமில மழை, கடல் பொங்கி வறட்சி அதிகமானது. பூகம்பம் வெடித்தது. 5. மருத்துவ முறைகள் பெரும்பான்மை அறுவைச்சிகிச்சை முறைகள், இயந்திரங்கள் சார்ந்து அமைந்தன - விளைவு தேவையான மருந்துகள் கிடைக்காது பற்றாக்குறை - பக்க விளைவுகள் 6. சிறு தொழில்களுக்குக் கடன் உதவி - இலவச விதை இலவச பரிசோதனை, இலவச மருந்து - கடன் வழங்குதல் என எல்லாவிதமான அமைப்பிலும் "தொழில்நுட்பம்" ஊடுருவி இருக்கின்றது. 7. தொழில்நுட்ப ஊடுருவலில் கிராமங்களிலும் நகரங்களிலும் தோன்றியிருக்கும் "பைனான்ஸ்" அமைப்புகள் கிராம நகர்ப்புற உறவுகளில் சிதைவை ஏற்படுத்தியிருப்பதை உணர வேண்டும். 8. உயிர்த்தொழில் நுட்பத்தில் ஓர் உச்சநிலையாக "எயிட்ஸ்" நுண்ணுயிர்கள் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு காலத்தில் அமெரிக்க போர் முறையாக கையாளப்பட்டது. ஆனால் அதிக அளவில் எயிட்ஸ் பரவியதற்கு பாலுணர்வு காரணமாக சுட்டப்படுகிறது. அதே போன்று கால்நடைகளில் பரவவிட்ட நுண்ணுயிர்கள் (ஆந்தராக்ஸ்) "வல்லரசு" என்ற தகுதியைத் தக்க வைத்துக்கொள்ள ஒவ்வொரு நாடும் போர் முயற்சியில் இறங்குகிறது - விளைவு மனித இனம் அழியக்கூடிய அபாய நிலை மனித உணர்வுகள் மறுக்கப்பட்டு மனிதநேயம் சிதைந்து கொண்டிருக்கின்றன. 9. ஒரு விதத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கோ, நுகர்பொருள் அடிமைத்தனத்திற்கோ போதைப் பொருட்கள் வன்முறை பாலுணர்வு மனச்சிதைவுக்கோ அடிப்படைக் காரணம், தேடினால் அது நவீன அறிவியல் தொழில்நுட்பத்தால் உணரலாம். 10. இன்றைய கணினி தொழில்நுட்பத்தில் மனிதன் கணினியின் ஒரு உறுப்பாக மாறி உள்ளான். இராணுவத்தின் இடங்களில் பயன்படுத்தப்படும் கணிதமும், விளையாட்டுக் கோட்பாடும் (Operation Research) ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படுகிறது. விண்வெளி ஏவுகணை முதல் குழந்தையின் வீடியோ கேம் விளையாட்டு வரை. குழந்தைகள் இவ்விளையாட்டு முறை ஒரு விதத்தில் இராணுவச் சிந்தனையை ஊக்குவிக்கிறது. கம்ப்யூட்டர் மயமாக்கல் வளர்ச்சி பெற்ற கார்ட்டீசிய பார்வையை முன் வைக்கிறது. புதிய அறிவியல் தொழில்நுட்பம்: 1. குறைந்த செலவினை முன் வைத்து மக்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தொழில்திறனை படைப்பாற்றலை வளர்க்கக்கூடியதாய் அடிமைத்தனத்தை வளர்க்காத தொழில்நுட்பம் தேவை. 2. சுற்றுச்சூழல் பேரழிவு இல்லாது, மூலவளங்கள் இருக்கும் இடத்திலே இழப்பின்றி பயன்படுத்தக்கூடியதாய் அதிகாரப் பரவல் அறிவியல் தொழில்நுட்பம் தேவை. 3. இயற்கையை அடக்குவதாக அல்லது இயற்கையோடு இயைந்த தொழில்நுட்பம் தேவை. 4. மனிதனின் முழு வளர்ச்சியை இலக்காகக் கொண்ட வணிக நோக்கமற்ற தொழில்நுட்பம் தேவை. 5. போருக்கான தொழில்நுட்பத்தை ஒதுக்கி அமைதிக்கான முன்னுரிமையை அளிக்கும் தொழில்நுட்பம் தேவை. கிராமங்களில் வாழும் மக்கள் உயிரற்ற இயந்திரங்களோடு போட்டி போட வேண்டியுள்ளது. மனித சக்தி போதிய அளவு கிடைக்காத சூழலில் இயந்திரங்கள் மனிதனுக்குத் துணை செய்ய வேண்டும். பயன்படுத்தும் வாய்ப்பே இல்லாதவர் இருக்கையில் எல்லாத்துறைகளிலும் இயந்திரங்களைப் புகுத்தி வேலை வாய்ப்பைக் குறைப்பது ஏழைச் சமூகத்தை பாதிப்பதாகும். அடிப்படை இலாப நோக்கத்தின் விளைவு சமூகத்தில் ஏற்றத்தாழ்வை உண்டுபண்ணும். "உற்பத்தி பெருமளவில் இருக்கவேண்டும் என்று கருதக்கூடாது. மக்களுக்காக உற்பத்தி இருக்க வேண்டும்" என்ற காந்தியின் கருத்து இங்கு நினைவுகூர்தல் வேண்டும். அறிவியலும், தொழில்நுட்பமும் வேறுவேறு அன்றி அறிவியலில் தொழில்நுட்பம் கருவியாக செயல்படுத்தப்படுகிறது என்றே கொள்ளுதல் வேண்டும். இன்றைய அறிவியல் இயற்கையை வென்றடக்குவதாக இருக்கின்றது. பசுமைப்புரட்சி, உயிர்த்தொழில்நுட்பம், தகவல் புரட்சி, கணினி என்ற வடிவங்களில் இன்று அறிவியல் வளர்ச்சி பெற்று வந்தாலும் அதில் தாங்கியுள்ள அசுரத்தனமான ஆதிக்கங்களை தெளிவாக நாம் உணர்ந்திருப்பதுடன் ஆதிக்கங்களை யார் செலுத்துகிறார்கள் என்பதையும் தெரிந்தே இருக்கிறோம். இன்றைய "அந்நியமாகி" மனிதநேயத்தை இழந்து கொண்டிருக்கிறான் என்பதே உண்மை. நன்றி: கட்டுரை மாலை

ஆண்களின் மூக்கு ஏன் பெரிது..?

ஆண்களுக்கு ஏன் மூக்கு பெரிதாக உள்ளது? அதிகம் கோபப்படுவதாலா? இல்லை அதிக அளவு பிராண வாயு தேவைப்படுவதாலேயே ஆண்களின் மூக்கு, அளவில் பெரிதாக இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மனித உடல் உறுப்புகளின் அமைப்பு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக பெண்களை விட, ஆண்களின் மூக்கு பெரிதாக அமைந்திருப்பதன் காரணம் குறித்து, மூன்று ஆண்டுகளாக ஆய்வு நடந்து வருகிறது. இந்த ஆய்வின் முடிவில், இதற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளதாவது, பொதுவாக பெண்களை விட, ஆண்களின் மூக்கு, 10 சதவீதம் அளவில் பெரியது. ஆண்களின் உடல் அமைப்பில் சதை அதிகம் உள்ளது. இதன் வளர்ச்சிப் பெருக்கத்திற்கு, அதிக அளவு ஆக்சிஜன் (O2) தேவைப்படுகிறது. பெண்களின் உடலில், சதையை (muscle) விட கொழுப்பு அதிகம் உள்ளது. ஆண்களை விட, பெண்களுக்கு சதை குறைவு என்பதால், அவர்களுக்கு ஆண்களை விட குறைந்த அளவிலான பிராண வாயு (ஆக்சிஜன்) போதுமானது. அதிக அளவு ஆக்சிஜனை உள்ளிழுப்பதற்காகவே, ஆண்களின் மூக்கு பெரிதாக அமைந்துள்ளது. ஐரோப்பிய ஆண்கள் மற்றும் பெண்களின் மூக்கின் அளவுகளின் அடிப்படையின் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நமது முன்னோர்களுக்கு பெரிய அளவிலான மூக்கு இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், தற்போதுள்ள தலைமுறையினருக்கு சிறிதாக உள்ளது. நம் மூதாதையர்கள் பெரிய உடல் அமைப்பை பெற்றிருந்தனர். அவர்களின் உடல் வளர்ச்சிக்காக, அவர்களுக்கு அதிக அளவு ஆக்சிஜனை உள்ளிழுக்கும் பெரிய மூக்கு தேவைப்பட்டது. ஆனால், நம் உடல் அளவு சிறிதாக இருப்பதால், தற்போது நம் மூக்கு சற்று சிறிதாகவே அமைந்துள்ளது. பொதுவாக, பிறக்கும் குழந்தைகளின் மூக்கின் அளவில் பெரிய மாறுபாடுகள் இருக்காது. ஆண், பெண் குழந்தைகளுக்கு ஒரே அளவிலான மூக்கே காணப்படும். 11 வயது ஆகும் போது, மூக்கின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும். 11 வயதைக் கடந்த சிறுவர், சிறுமியரிடம் மூக்கின் அளவில் உள்ள வேறுபாட்டை நம்மால் நன்கு காண முடியும். நன்றி:ஈழநாதம்.

Tuesday, November 12, 2013

துணைக்கோள்..(Satellite)

புவியின் துணைக்கோள் சந்திரன் ஆகும். நிலா (நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன் என்று பலவாறு கூறப்படும்) (இலத்தீன்: luna) எனப்படுவது பூமிக்கான ஒரேயொரு இயற்கைத் துணைக்கோளும் சூரியக் குடும்பத்திலுள்ள ஐந்தாவது பெரிய துணைக்கோளும் ஆகும். இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். இது பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள். இது பூமியைச் சுற்றி வர சராசரி 29.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384,403கி.மீ. புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் (escape speed) அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது. செவ்வாயின் துணைக்கோள்கள்[தொகு] செவ்வாயின் துணைக்கோள்கள் 2 ஆகும். அவையாவன போபொஸ், டெய்மொஸ். இரு துணைக்கோள்களும் 1877 இல் அசப் ஹல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. போபொஸ் செவ்வாயிற்கு அருகில் உள்ளது. அதுவே செவ்வாயின் துணைக்கோள்களில் மிகப் பெரியது.

Friday, August 30, 2013

இலவச தமிழ் சொற்பொழிவுகள் CD Free Tamil Devotional Speech CD playing 27 Hrs

CD Pouch : http://www.mediafire.com/?fc2tan4nglbdl Download CD: http://www.mediafire.com/?ndcfpfk4ewl03 (700 mb)

blood group

blood groupரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை? ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது? ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள். ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?chart-12 ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும். ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது? எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன. ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு? ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது. ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன? ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம். ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன? உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள். பிளாஸ்மா என்றால் என்ன? ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள். ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன? உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை. உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா? ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான். ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீன் அளவு எவ்வளவு தெயுமா? 24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன. தலசீமியா என்பது தொற்று நோயா? இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந் நோய் வர வாய்ப்பில்லை. மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன? மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். ரத்தம் உறைவதற்கு எது அவசியம்? ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது. ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன? ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. “‘O’ பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர். ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிரிக்கப்படுகிறது? ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B’ குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும். ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா? செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது. ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.

=வியத்தகு அறிவியல் செய்திகள்=

நன்கு வளர்ச்சியடைந்த ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு, 17 அங்குல நீளம் இருக்கும்.

மின்னல் தாக்கிய விலங்குகளை மற்ற விலங்குகள் உண்ணாது


யானையின் தும்பிக்கையில் எலும்புகள் இல்லை. ஆனால் 40 ஆயிரம் தசைகள் உள்ளன. இதனால் தான், மிகப் பெரிய பொருட்களைக் கூட யானையால் தூக்கி எறிய முடிகிறது.

ஆஸ்திரேலியாவில் வாழும் ஒருவகை மண்புழு, 10 அடி நீளம் வரை வளரும்.

மரங்கொத்திப் பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தும்.

முதல் உலகப்போரின் போது, தென்ஆப்பிரிக்க ராணுவத்தில் ஜாக்கி என்ற பபூன் குரங்கு உளவாளியாக செயல்பட்டது.

பனாமா கால்வாய் கட்டுமானப் பணிகளின் போது சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் இறந்தனர். அவர்களில் 20 ஆயிரம் பேருக்கு மலேரியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நாணயங்களில் புத்தரின் உருவத்தைப் பொறித்த முதல் மன்னர், கனிஷ்கர்.

1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, இந்திய அரசியல் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு முதன் முதலில் புகையிலையை அறிமுகம் செய்தவர்கள், போர்த்துக்கீசியர்கள்

இந்தியாவில் அஞ்சல் வழி கல்வித் திட்டத்தைத் துவக்கிய முதல் பல்கலைக் கழகம், தில்லி பல்கலைக் கழகம்.

காந்தியை 'மகாத்மா' என முதன்முதலாக அழைத்து பெருமைப்படுத்தியவர், ரவீந்தரநாத் தாகூர்.

18 வயது நிரம்பியபோது, இங்கிலாந்து ராணி பிரிட்டிஷ் ராணுவத்தில் மெக்கானிக்காக பணியாற்றினார்.

பண்டைய எகிப்தில் அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளிகள் இறந்தால் மருத்துவரின் கைகள் வெட்டப்படும்.

பண்டைய ரோம் அரசாட்சிக்குட்பட்ட பகுதிகளில், கூர்மையான மூக்குடன் பிறக்கும் ஆண், தலைமைப் பதவியில் அமர்த்தப்படுவார்.

அனைத்தும் போலார் கரடிகளும் இடது கை பழக்கம் கொண்டவை.

ஐஸ்லாந்து நாட்டுல் ரயில் போக்குவரத்து கிடையாது.

தீபாவளி கொண்டாட்டங்களைப் போலவே, பிரேசில் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.

பசுக்களின் பாதுக்காப்புக்கு சட்டம் கொண்டுள்ள ஒரே நாடு, இந்தியா.

கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.

எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை அடைந்த முதல் இந்தியர் நாவாங் கோம்பு.

பேனாவைக் கண்டுப்பிடித்தவர் லூயிஸ் ஜே. வாட்டர்மேன்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி பச்சேந்திரி பால்.

சைகை மொழியைத் கண்டுபிடித்தவர் ஆல்பே சார்லஸ் மைக்கேல் (பிரான்ஸ்).

மனிதர்களின் புருவத்தில் சராசரியாக 550 முடிகள் இருக்கும்.